பெரியகோவிலில் குவியும் பக்தர்கள்:வெயில் தாக்கத்தால் பக்தர்கள் கடும் அவதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18மே 2019 05:05
தஞ்சாவூர்: மே.19 - தஞ்சையில் வெயிலின் தாக்கததால் பெரிய கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 4ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியதை அடுத்து தஞ்சையில் மாவட்டத்தில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி கொளுத்தி வருகிறது. கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலுக்கு தினந்தோறும் வெளிநாட்டினர் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகின்றனர். இந்நிலையில் வெயில் தாக்கத்தினால் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தரை தளத்தில் நடந்து செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். பக்தர்களின் சிரமத்தை தவிர்க்கும் வகையில் கோவிலில் சில இடங்களில் மட்டும் தரை விரிப்புகள் போடப்பட்டுள்ளது.அதிலும் காலை வேளையில், தண்ணீர் அடிக்கப்பட்டு வருகிறது. இது ஒரு புறம் பக்தர்களுக்கு வெப்பத்தை தணிக்கும் வகையில் இருந்தாலும், வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க தரை விரிப்புகளை கோவில் முழுவதும் பயன்படுத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கலைகளை ரசிக்க சுற்றுலா பயணிகள் வெயிலையும் பொறுப் படுத்தாமல் குடையை பிடித்தப்படி வந்து செல்கின்றனர்.