பதிவு செய்த நாள்
20
மே
2019
11:05
நாமக்கல்: வைகாசி மாத முதல் ஞாயிறை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு, சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன.
நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை ஒட்டி, நேற்று சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. முன்னதாக, வடை மாலை அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். தொடர்ந்து நல்லெண்ணெய், சீயக்காய்த்தூள், பால், தயிர், வெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம், திருமஞ்சனம், மஞ்சள், சந்தனம் போன்ற பொருட்களால் அபிஷேகம் நடந்தது. இதை தொடர்ந்து, சிறப்பு அலங்காரம் செய்து, தீபாராதனை காட்டப்பட்டது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.