திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக மொட்டையரசு திருவிழா நடந்தது.
இக்கோயிலில் மே 7 சுவாமிகளுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கிய இத்திருவிழாவில் தினமும் இரவு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை வசந்த மண்டபத்தில் எழுந்தருளி 30 நிமிடங்கள் வசந்த உற்ஸவம் நடந்தது. நேற்று முன் தினம் பால்குட உற்ஸவம் நடந்தது. நேற்று காலை உற்ஸவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு அபிஷேகம், ஆராதனைகள் முடிந்து தங்க குதிரை வாகனத்தில் தியாகராஜர் பொறியியல் கல்லுாரி வளாகத்திலுள்ள மொட்டையரசு திடலில் எழுந்தருளினர். பக்தர்களின் திருக்கண் மண்டபங்களில் சுவாமி எழுந்தருளினர். இரவு 11:00 மணிக்கு பூ பல்லக்கில் சுவாமி கோயில் சென்றடைந்தார்.