லலிதா செல்வாம்பிகை கோவிலில் பவுர்ணமி சிறப்பு ஹோமம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20மே 2019 12:05
செஞ்சி: செல்லபிராட்டி லலிதா செல்வாம்பிகை கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு ஹோமம் நடந்தது.
செஞ்சி அருகே உள்ள லலிதா செல்வாம்பிகை அம்மன் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு ஜோதி தரிசனம் மற்றும் சிறப்பு ஹோமம் நடந்தது.இதை முன்னிட்டு மாலை 4 மணிக்கு லலிதா செல்வாம்பிகைக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரமும் நடந்தது. 7 மணிக்கு சிறப்பு ஹோமம் நடந்தது. 9 மணிக்கு மகா பூர்ணாஹூதி, தொடர்ந்து அம்மனுக்கு கலச நீர் கொண்டு சிறப்பு அபிஷேகம், மகா புஷ்பாஞ்சலி, லலிதாசகஸ்ரநாம அர்ச்சனை, ஜோதி தரிசன வழிபாடும் நடந்தது.அறங்காவலர் கன்னியப்பன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பூஜைகளை ஈஸ்வரன் குருக்கள் செய்தார்.