மங்கலம்பேட்டை: காட்டுப்பரூர் ஆதிகேசவ பெருமாள் கோவில் தேர்த் திருவிழாவில், ஏராளமானோர் வடம் பிடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மங்கலம்பேட்டை அடுத்த காட்டுப்பரூர் சுயம்பு ஆதிகேசவ பெருமாள் கோவில் தேர்த் திருவிழா கடந்த 11ம் தேதி காலை 7:30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி காலை 7:00 மணிக்கு சுவாமிக்கு அபிேஷக ஆராதனை, இரவு 9:00 மணிக்கு அலங்கரித்த வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. கடந்த 17ம் தேதி இரவு 7:30 மணிக்கு ஆதிகேசவ பெருமாள், வேதவள்ளி நாச்சியார் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று (19 ம் தேதி) காலை 6:00 மணியளவில், திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமானோர் தேர் வடம் பிடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று (20ம் தேதி) இரவு 8:00 மணிக்கு தீர்த்தவாரி நடக்கிறது.