வாடிப்பட்டி: மதுரை அருகே பரவையில் மயூரநாதர் கோயில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. முன்னதாக ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து சென்று சுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். சிறப்பு அலங்காரத்தில் வள்ளி தேவசேனா உடன் சுவாமி அருள்பாலித்தார். தர்மசாஸ்தாவிற்கு மகா அபிஷேகம் நடந்தது. விழா ஏற்பாடுகளை கோயில் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்தனர். சமயநல்லுார் சக்தி மாரியம்மன் கோயில் வைகாசி பொங்கல் விழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. ஏராளமான பக்தர்கள் காப்புகட்டி சிறப்பு வழிபாடுகள் செய்தனர்.