காரைக்குடி : காரைக்குடி அருகே பாலையூர் கண்டனுார் மகாலட்சுமி சமேத லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் லட்சார்ச்சனை விழா தொடங்கியது. நேற்று காலை 10:40 மணிக்கு மகாலட்சுமி தாயாரின் திருக்கல்யாண வைபவம் செட்டிநாட்டு முறைப்படி கழுத்திரு அணிவித்து நடந்தது. பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் திருக்கல்யாண கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை பாலையூர் நகரத்தார் செய்திருந்தனர்.