பதிவு செய்த நாள்
21
மே
2019
12:05
திருத்தணி: திருத்தணி அடுத்த, மேல்திருத்தணி மற்றும் குடிகுண்டா ஆகிய கிராமங்களில் உள்ள திரவுபதியம்மன் கோவில்களில், தீமிதி திருவிழா, 9ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது.
இந்நிலையில், நேற்று காலை, 10:00 மணிக்கு, கோவில் வளாகத்தில், அர்ச்சுனன் தபசு நிகழ்ச்சி நடந்தது. இதற்காக, 30 அடி உயரமுள்ள பனை மரம் நடப்பட்டு, அர்ச்சுனன் தவ வேடத்தில், பனை மரத்தின் ஒவ்வொரு படிக்கும், ஒரு பாடல் பாடியவாறு ஏறினார்.பின், மரத்தின் உச்சியில் இருந்து, அர்ச்சுனன் தவம் புரிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது, திரளான பெண்கள் பனை மரத்தின் கீழ் படுத்து, திருமணம், குழந்தை வரம் வேண்டி பிரார்த்தனை செய்து வழிபட்டனர்.நிகழ்ச்சியில், 1,000த்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், உற்சவர் திரவுபதியம்மனை வழிபட்டனர். வரும், 26ம் தேதி, காலையில், துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், மாலையில், தீமிதி திருவிழாவும் நடைபெறுகிறது.