கடலுார்: முதுநகர் அற்புத விநாயகர் கோவில் வசந்த உற்சவத்தையொட்டி வெள்ளி விநாயகர் தெப்பல் உற்சவம் நடந்தது. கடலுார் முதுநகர் வெள்ளி பிள்ளையார் எனப்படும் அற்புத விநாயகர் கோவில், 96ம் ஆண்டு வசந்த உற்சவம் கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதனையொட்டி வெள்ளி பிள்ளையாருக்கு தினம் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடந்தது. இரவு சுவாமி புறப்பாடு நடந்தது. உற்சவத்தின் 11ம் நாள் காலை வெள்ளி பிள்ளையார் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இரவு முதுநகர் குளத்தில் சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் தெப்ப உற்சவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். உற்சவ ஏற்பாடுகளை செயல் அலுவலர்கள் முத்துலட்சுமி, முருகன், கோவில் குருக்கள் சரவணபவன் செய்தனர்.