பதிவு செய்த நாள்
22
மே
2019
02:05
திருவொற்றியூர் : திருவொற்றியூர், தியாகி சத்தியமூர்த்தி நகர், ஸ்ரீ முனீஸ்வரர் - வெட்டுடையாள் காளியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. 33ம் ஆண்டு தீமிதி திருவிழா, 14ம் தேதி, காப்பு கட்டுதல், கொடியேற்றத்துடன் துவங்கியது.விழாவின் முக்கிய நிகழ்வான, தீமிதி திருவிழா, நேற்று முன்தினம் (மே., 20ல்) இரவு நடந்தது.மாலை, கலைஞர் நகர் ஞானாம்பிகை கோவிலில் நீராடிய பக்தர்கள், தீச்சட்டி ஏந்தி, தயார் செய்து வைத்திருந்த, அக்னி குண்டத்தில் இறங்கி, தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.