நெட்டப்பாக்கம் திரவுபதி அம்மன் கோவிலில் கூத்தாண்டவர் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23மே 2019 11:05
நெட்டப்பாக்கம்:மடுகரை திரவுபதி அம்மன் கோவிலில் நேற்று (மே., 22ல்) கூத்தாண்டவர் தேரோட்டம் நடந்தது.
நெட்டப்பாக்கம் அடுத்த மடுகரை கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் உள்ள கூத்தாண்டவர் கோவிலில் திருத்தேர் உற்சவம் கடந்த 17ம் தேதி துவங்கியது. தினமும் கூத்தாண்டவர் மற்றும் திரவுபதி அம்மனுக்கு, சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகளும், தினமும் சுவாமி வீதியுலா நடந்து வந்தது.கடந்த 12ம் தேதி திரவுபதி அம்மன்-அர்ஜூணன் திருக்கல்யாணமும், நேற்று முன்தினம் (மே., 21ல்) இரவு கூத்தாண்டவர் திருக்கல்யாணம் நிகழ்ச்சியும், தொடர்ந்து இரவு முத்துப்பல்லாக்கு நிகழ்ச்சி நடந்தது.முக்கிய நிகழ்ச்சியான கூத்தாண்டவர் தேரோட்டம் நேற்று (மே., 22ல்) காலை நடந்தது. தேரோட்டத்தில் முன்னாள் சபாநாயகர் வைத்திலிங்கம், விஜயவேணி எம்.எல்.ஏ., மற்றும் மடுகரை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தேர்வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர். நாளை (மே., 24ல்) மாலை 6:00 மணிக்கு தீமிதி திருவிழா நடக்கிறது.