பண்ருட்டி:திருவதிகை வீரட்டானேஸஸ்வரர் கோவிலில் திருஞான சம்மந்தருக்கு அம்பாள் ஞானப்பால் ஊட்டும் ஐதீக நிகழ்ச்சி நடந்தது.
விழாவையொட்டி காலை 6 மணிக்கு மூலவர் வீரட்டானேஸ் வரர், அம்பாள் பெரியநாயகி, திருஞானசம்மந்தருக்கு பால், சந்தனம் தேன் மற்றும் மூலிகை திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை, விசேஷ பூஜைகள் நடந்தது.மாலை 6:00 மணிக்கு உற்சவர் சிவன்-பார்வதி வெள்ளி ரிஷப வாகனத்தில் குளத்து மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர் திருக்குளத்தில் ஞானசம்மந்தருக்கு அம்பாள் ஞானப்பால் ஊட்டும் ஐதீக நிகழ்ச்சி நடந்தது.விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.