பதிவு செய்த நாள்
24
மே
2019
12:05
பண்ருட்டி:கட்டமுத்துப்பாளையம் கிராமத்தில், 41 அடி உயர ஆஞ்சநேயர் சிலைக்கு மகா கும்பாபிஷேகம் நேற்று (மே., 23ல்) நடந்தது.
பண்ருட்டி அடுத்த கட்டமுத்துப்பாளையம் கிராமத்தில் செல்வ விநாயகர், சீதாலட்சுமண பரதசத்ருகண ராமசந்திர மூர்த்தி சமேத 41 அடி உயர ஆஞ்சநேயர் சிலை கொண்ட கோவிலில்
மகாகும்பாபிஷேகம் நேற்று (மே., 23ல்) நடந்தது.
விழாவையொட்டி நேற்று முன்தினம் 22ம் தேதி மாலை 5:00 மணிக்கு பகவத் அனுக்ஞை, புண்யாகவாசனம், எஜமான சங்கல்பம். மாலை 6:30 மணிக்கு அங்குரார்பணம், வாஸ்து சாந்தி,மகாசாந்தி திருமஞ்சனம், அஷ்டபந்தனம் சமர்ப்பித்தல் நடந்தது. இரவு 9:00 மணிக்கு மகாபூர்ணாஹூதி சாற்றுமுறை நடந்தது. நேற்று (மே., 23ல்) காலை 5:00 மணிக்கு விஸ்வரூபம், புண்யாகவாசனம், பரிவார மூல ஹோமம், யாத்ராதானம் நடந்தது. காலை 8:00 மணிக்கு கடம்புறப்பாடாகி, 8:50 மணியளவில் மகாகும்பாபிஷேகம் நடந்தது. இரவு 9:00மணிக்கு உற்சவர் வீதியுலா நிகழ்ச்சியும் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். யாகசாலை பூஜைகள் கஸ்தூரி ரங்கன் பட்டாச்சாரியார் தலைமையில் நடந்தது.