பதிவு செய்த நாள்
25
மே
2019
11:05
திருத்தணி: தணிகாசலம்மன் கோவிலில், நேற்று நடந்த சண்டி யாகத்தில், திரளான பக்தர்கள் வழிபட்டனர்.
திருத்தணி, அக்கைய்ய நாயுடு சாலையில் உள்ள தணிகாசலம்மன் கோவிலில், நேற்று முன்தினம், காலை, சண்டி யாகத்தையொட்டி, கோவில் வளாகத்தில் ஒரு யாகசாலை, ஐந்து கலசங்கள் வைத்து கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது.மேலும், மஹா சங்கல்பம், புண்ணியாவாசம், கோ பூஜை, கலச ஸ்தாபனம், நவக்கிர, துர்கா ஹோமம் மற்றும் தீபாராதனை நடந்தது.நேற்று, காலை, 9:00 மணிக்கு, கலச அலங்காரம் மற்றும் பூஜைகள் துவங்கின. மதியம், 12:00 மணிக்கு, மகா சண்டி ஹோமம் நடந்தது.அதை தொடர்ந்து, மூலவருக்கு, 108 சங்காபிஷேகம் மற்றும் கலச நீர் ஊற்றி அபிஷேகம் நடந்தது. பின், சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை, 5:00 மணிக்கு, உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இதில், திருத்தணி மற்றும் அதை சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து, திரளான பக்தர்கள் வழிபட்டனர்.