காரைக்குடி : காரைக்குடி முத்தாலம்மன் கோயில் வைகாசி பொங்கல் விழாவை முன்னிட்டு புற்று மண் மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதில் முத்தாலம்மன் காலை 9 மணி அளவில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். பெண் பக்தர்கள் பொங்கல், மாவிளக்கு வைத்து வழிபட்டனர். கோயில் செயல் அலுவலர் பிரதீபா ஏற்பாடுகளை செய்திருந்தார்.