பதிவு செய்த நாள்
27
மே
2019
10:05
திருவண்ணாமலை: மழை வேண்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் குளத்தில், நாதஸ்வர கலைஞர்கள் அமிர்தவர்ஷினி ராகம் இசைத்தனர்.
அக்னி நட்சத்திரம், 4ம் தேதி துவங்கியது. இதை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரருக்கு, தினமும் தாராபிஷேகம் நடந்து வருகிறது. கோடை வெப்பம், கடுமையாக வாட்டி வரும் நிலையில், மழை வேண்டி, 8ம் தேதி, கோவிலில் வருண யாகம், வருண ஜெபம், ருத்ர ஜெபம் நடந்தது. நேற்று, கோவிலின் ஆஸ்தான நாதஸ்வர கலைஞர்கள், அருணாசலேஸ்வரர் கோவில் பிரகாரத்தில் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் இறங்கி, அமிர்தவர்ஷினி ராகம் இசைத்து, மழை வேண்டி பிரார்த்தனை நடத்தினர். அக்னி நட்சத்திரம், 29ம் தேதியுடன் முடிகிறது. இதை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், இன்று தோஷ நிவர்த்தி யாகம் நடக்கிறது. யாகத்தில் வைப்பதற்காக, 1,008 கலசங்கள் தயார்படுத்தும் பணியில், கோவில் குருக்கள் ஈடுபட்டுள்ளனர்.