திருப்பதி:திருமலை ஏழுமலையானை தரிசிக்க, பக்தர்கள், 26 மணிநேரம் காத்திருக்கின்றனர். கோடை விடுமுறை நிறைவு பெறவுள்ள நிலையில், வார இறுதி விடுமுறை நாட்களில் திருமலைக்கு பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர். அதனால், தரிசனத்திற்கு, 26 மணிநேரம் பக்தர்கள் காத்திருந்தனர்.வைகுண்டம் காத்திருப்பு அறைகள் நிறைந்து, வெளியில் உள்ள தரிசன வரிசையில், பக்தர்கள் காத்திருந்தனர். திருமலையில் பக்தர்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. பக்தர்களின் கூட்டம் இன்று முதல் குறையும் என, தேவஸ்தான அதிகாரிகள் கருதுகின்றனர்.