மயிலம்:மயிலம் முருகன் கோவிலில் சஷ்டி வழிபாடு நடந்தது.மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமி கோவிலில் சஷ்டியை முன்னிட்டு நேற்றுமுன்தினம் (மே., 25ல்)காலை 6:00 மணிக்கு கோவில் வளாகத்திலுள்ள பாலசித்தர், விநாயகர், வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர், நவகிரக சுவாமிகளுக்கு அபிஷேகம், வழிபாடு நடந்தது.
தொடர்ந்து 11:00 மணிக்கு பால், சந்தனம், தேன் உள்ளிட்ட நறுமண பொருட்களினால்அபிஷேகம் நடந்தது. மதியம் 12:00 மணிக்கு மூலவர் தங்கக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 1:00 மணிக்கு கோவில் மண்டபத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 8:00 மணிக்கு உற்சவர் மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.விழா ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார்.