பதிவு செய்த நாள்
27
மே
2019
12:05
புதுச்சேரி: உலக நன்மை வேண்டி, லட்சுமி விஷ்ணு சகஸ்ரநாம மண்டலி சார்பில், விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம் நடந்தது.
லட்சுமி விஷ்ணு சகஸ்ரநாம மண்டலி சார்பில், 15ம் ஆண்டு விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம் மற்றும் உபன்யாசம் நேற்று, சித்தன்குடி ஜெயராம் திருமண மண்டபத்தில் நடந்தது. காலை 5:30 மணிக்கு சுப்ரபாதம், காலை 6:30 மணிக்கு குயவர்பாளையம், நவநீத கிருஷ்ணன் கோவிலில் இருந்து, வைத்திக்குப்பம் சத்தியமூர்த்தி குழுவினரின் நாம சங்கீர்த்தனம், பஜனையுடன் ஜெயராம் மண்டபத்திற்கு ஊர்வலமாக சென்றனர்.லட்சுமி விஷ்ணு சகஸ்ர நாம மண்டலி, தலைவர் ராஜராம தேசியதாசன் வரவேற்றார். நிறுவனர் ஜனார்த்தன ராமானுஜதாசன் முன்னிலை வகித்தார். ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ராமபத்திரன் தலைமை உரையாற்றினார். மைலாப்பூர் மலோலக்கண்ணன் சிறப்புரையாற்றினர். காலை 11:30 மணிக்கு, திருவந்திபுரம் சீனிவாச சாமிகள் விஷ்ணு சகஸ்ரநாம ஜபத்தை துவக்கி வைத்தார். மாலை 4:30 மணிக்கு லட்சுமி அஷ்டோத்தரம், மங்கள ஆரத்தி நடந்தது. முத்தியால் ராமானுஜதாசன் நன்றி கூறினார்.