பதிவு செய்த நாள்
27
மே
2019
01:05
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த, வேண்பாக்கம் விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவிலில், மழை வேண்டி, மகா வருண யாகம் நடந்தது. நேற்று (மே., 26ல்) காலை, 9:00 மணிக்கு துவங்கி, பகல் 12:00 மணி வரை நடைபெற்றது.பின், கால பைரவர் சுவாமிக்கு நடந்த சிறப்பு அபிஷேகதத்தில், வேண்பாக்கம் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்றனர்.
மயானம் ஏற்படுத்த கோரிக்கைமதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த தண்டலத்தில், 40க்கும் மேற்பட்ட இருளர் குடும்பத்தினர் வசிக்கின்றனர்.இப்பகுதியில் மயானம் ஏற்படுத்த வேண்டும் என, பல மாதங்களாக, அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில், மதுராந்தகம் கோட்டாட்சியர் மாலதியைச் சந்தித்த இருளர்கள், தங்களுக்கான மயானத்திற்கு இடம் ஒதுக்கித் தருமாறு, கோரிக்கை விடுத்தனர். கோரிக்கை பரிசீலிப்பதாக, கோட்டாட்சியர் கூறியுள்ளார்.