பதிவு செய்த நாள்
27
மே
2019
02:05
தர்மபுரி: தர்மபுரி அருகே ஒன்னியம்பட்டியில் இடம்பன் பூஜை விழாவில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
தர்மபுரி மாவட்டம், ஆண்டிஹள்ளி பஞ்., ஒன்னியம்பட்டியில் இடம்பன் பூஜை எட்டாம் ஆண்டு விழா நேற்று (மே., 26ல்) நடந்தது. இதை முன்னிட்டு, காலை, 6:30 மணிக்கு இளநீர் காவடி பூஜையும், 8:30 மணிக்கு இடம்பன் சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன. காலை, 9:00 மணிக்கு ஆடு பலியிடுதல், அதையடுத்து சிறப்பு பூஜைகளும், பகல், 1:00
மணிக்கு, கும்பதலை பூஜையும் நடந்தன. பின்னர், 2:00 மணிக்கு அன்னதானம் நடந்தது. இதில், ஆண்டிஹள்ளி, ஒன்னியம்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பெண்கள்,
பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை காவடி பக்தர்கள் மற்றும் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.