பதிவு செய்த நாள்
16
மார்
2012
10:03
பேரூர் : பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திரத் தேர்த்திருவிழா, வரும் 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.கொங்குநாட்டு வைப்புத்தலங்களில் பேரூர் பட்டீஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாகும். இக்கோவிலில், ஒவ்வொரு ஆண்டும், பங்குனி உத்திரத் தேர்த்திருவிழா, 10 நாள் உற்சவமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு, பங்குனி உத்திரத் தேர்த்திருவிழா, வரும் 27ம் தேதி காலை 8.00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. மாலை ஸ்ரீ அதிமூர்க்கம்மன் அரண்மனை திருவிளக்கு வழிபாடு, இரவு மலர் பல்லக்கு நிகழ்ச்சி நடக்கிறது. தினசரி சுவாமி வீதி உலா வருகிறார், ஏப்., 1ம் தேதி இரவு திருக்கல்யாண உற்சவம், வெள்ளை யானை சேவையும், மறுநாள் காலை பஞ்சமூர்த்திகள் திருத்தேருக்கு எழுந்தருளல் செய்விக்கப்பட்டு, மாலையில் திருத்தேர் வடம் பிடித்தல் நடக்கிறது. ஏப்., 3ம் தேதி, மாலை வேள்விபூஜை, இரவு வேடுபரி உற்சவம், குதிரைவாகனம், கிளிவாகன உலாவும், 4ம்தேதி இரவு 8.00 மணிக்கு, இந்திர விமான தெப்பத்திருவிழாவும் நடக்கிறது. 5ம் தேதி, ஸ்ரீநடராஜபெருமான் திருமஞ்சன தரிசனக் காட்சி, மகாதீபாராதனை செய்விக்கப்பட்டு திருவீதி உலா நடக்கிறது. 5ம்தேதி விழா முடி வடைகிறது.