பதிவு செய்த நாள்
11
ஜூன்
2019
03:06
கடலூர்: கடலூர் சுப்ராயலு நகர் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வரும் 13ம் தேதி நடக்கிறது.
கடலூர் சுப்ராயலு நகர் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு (இன்று) காலை 8:00 மணிக்கு கணபதி பூஜை, மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், கோ பூஜை, மாலை 5:00 மணிக்கு வாஸ்து சாந்தி, பிரவேச பலி, இரவு 9:00 மணிக்கு மகா தீபாராதனை நடக்கிறது.
நாளை 12ம் தேதி காலை 8:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை ஹோமம், மாலை 5:30 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை, அம்மனுக்கு அஷ்டபந்தனம் சாற்றுதல் நடக்கிறது. 13ம் தேதி காலை 5:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, நாடி சந்தானம், 7:00 மணிக்கு யாத்ராதானம், கடம் புறப்பாடு, 8:00 மணிக்கு மூலவர் அம்மன், பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம், 11:00 மணிக்கு அபிஷேகம் நடக்கிறது.