சிவகாசி:சிவகாசி விஸ்வநாதசுவாமி கோயிலில் வைகாசி விழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.இக்கோயில் வைகாசி திருவிழா கடந்த 3ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டு கொடிமரத்திற்கு தயிர், பால், பஞ்சாமிர்தம், இளநீர் , சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடந்தது. திருவிழா நாட்களில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் ஊர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள் புரிந்து வந்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். பின்னர் விஸ்வநாதர் விசாலாட்சிக்கு சிறப்பு பூஜையும் நடந்தது.