காரைக்கால்: திருநள்ளார் சனீஸ்வரபகவான் கோவிலில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு ஐந்து தேர் திருவிழா நடைபெற்றது.
காரைக்கால் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வரபகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதைத் தொடர்ந்து கடந்த 30 ம் தேதி முதல் 1ம் தேதி வரை விநாயகர் உற்சவமும். கடந்த 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை சுப்பிரமணிய சுவாமி உற்சவம். கடந்த 5ம் தேதி அடியார் நால்வர் புஷ்ப பல்லக்கில் வீதி உலா நடந்தது. கடந்த 7ம் தேதி செண்பக தியாகராஜ சுவாமிகள் உன்மத்த நடனத்துடன் வசந்தம் படத்திலிருந்து யதாஸ்தானத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று பஞ்சமூர்த்திகள் தங்க ரிஷப வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெறுகிறது.
அதைத்தொடர்ந்து இன்று திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் செண்பக தியாகராஜர். நீலோத்தம்பாள். விநாயகர்.முருகன்.சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட ஐந்து தேர் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. தேர் திருவிழாவை வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன். கலெக்டர் விக்ரந்தராஜா. கோவில் நிர்வாக அதிகாரி சுந்தர். கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் வடம்பிடித்து தேர் திருவிழாவை துவக்கி வைத்தனர். 5 தேர்கள் தெற்குவீதி புறப்பட்டு வடக்கு. மேற்கு வீதிகள் வழியாக நிலைக்கு வந்தடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தியாகராசா. தியாகராசா. கோஷங்கள் முழுக்க 5 தேர்கள் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வடம் பிடித்து இழுத்தனர். மேலும் நாளை (13ம் தேதி) சனீஸ்வர பகவான் தங்ககாக வாகனத்தில் சகோபுர வீதியுலா நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்து வருகின்றன.