வடமதுரை:அய்யலூர் அருகே பெருமாள் கோவில்பட்டியில் காளியம்மன், மாரியம்மன் கோயில் உற்ஸவ திருவிழா கடந்த ஜூன் 9 துவங்கி மூன்று நாட்கள் நடந்தது. .
மாவிளக்கு, அக்கினிச்சட்டி எடுத்தல், பொங்கல் வைத்தல், கிடாய் வெட்டி நேர்த்திக்கடன் செலுத்துதல், முளைப்பாரி அழைத்தல் என பல்வேறு வழிபாடுகள், பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று (ஜூன்., 11ல்) மாலை மஞ்சள் நீராட்டுடன் அம்மன் கங்கை சென்றடைந்த துடன் திருவிழா நிறைவடைந்தது.
நத்தம்: நத்தம் அருகே பரளி தேத்தாம்பட்டியில் முத்தாலம்மன் கோயில் திருவிழா நடந்தது. முதல் நாள் அம்மன் அலங்கரிக்கப்பட்ட நிலையில் கோயில் மந்தையில் எழுந்தருளியது. விழாவில் மாவிளக்கு, அக்கினிச்சட்டி எடுத்தல், கிடா வெட்டுதல் உள்ளிட்ட நிகழ்சிகளை தொடர்ந்து, அம்மன் பூஞ்சோலை சென்றடைந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.