பதிவு செய்த நாள்
12
ஜூன்
2019
02:06
செங்கல்பட்டு : செங்கல்பட்டு அடுத்த, அனுமந்தபுரம் வீரபத்ரர் கோவில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.இக்கோவிலுக்கு, ராஜகோபுரம் கட்டித்தர வேண்டும் என, அரசிடம், நீண்டகாலமாக பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, அரசு ஒதுக்கிய, 67 லட்சம் ரூபாய் நிதியில், 61 அடி உயர ராஜகோபுர திருப்பணிகள், 2017ல் துவங்கி, சமீபத்தில் முடிந்தன.தொடர்ந்து, நேற்று முன்தினம் (ஜூன்., 10ல்) காலை, 9:00 மணிக்கு, கணபதி ஹோமம், அகோர வீரபத்ரர் சுவாமி மூலவர் ஹோமத்துடன், கும்பாபிஷேக விழா துவங்கியது. நாளை மறுநாள் (ஜூலை 14ல்) காலை, 9:00 - 10:30 மணிக்குள், கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. பக்தர்கள் வசதிக்காக, சுகாதாரம், குடிநீர், தற்காலிக கழிப்பறைகள் உள்ளிட்ட பல பணிகள் செய்யப்பட்டுள்ளன.