பதிவு செய்த நாள்
13
ஜூன்
2019
12:06
ராஜபதி: திருச்செந்தூர் அருகில் குரும்பூரிலிருந்து ஏரல் செல்லும் வழியில் அமைந்துள்ள திருத்தலம் ராஜபதி அருள்மிகு சவுந்திரநாயகி சமேத கைலாசநாதர் கோயில். இத்தலத்தை கேது பகவான் வணங்கியுள்ளார்.
நவ கைலாயத்தில் இது 8வது தலமாகும். இவ்வளவு சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் நாளை வெள்ளிக்கிழமை காலை 07.30 மணி முதல் 08.30 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற இருக்கிறது. இந்த கும்பாபிஷேகம் கூனம்பட்டி கல்யாணபுரி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ இராஜ. சரவண மாணிக்க வாசக சுவாமிகள் தலைமையில், காஞ்சி சங்கரமடம் விஜயேந்திரர் ஆசியுடன், தூத்துக்குடி இரா. செல்வம் சிவாச்சாரியார் (எ) கல்யாணசுந்தர சிவாச்சாரியார், முதல்வர் ஆலால சுந்தர வேத சிவகாம வித்யாலயம், தூத்துக்குடி அவர்கள் சர்வசாதகப் பொறுப்பேற்று வெகுசிறப்பாக நடைபெற உள்ளது.
நிகழ்ச்சி நிரல்:
13.06.2019:
காலை 08:45 மணி - விஷேச சந்தி, ஆறாம் கால யாக பூஜை, பூர்ணாஹூதி, தீபாராதனை.
மாலை 06:00 மணி - விஷேச சந்தி, ஏழாம் கால யாக பூஜை, பூர்ணாஹூதி, தீபாராதனை.
14.06.2019:
காலை 05:00 மணி - எட்டாம் கால யாக பூஜை ஆரம்பம், மஹா பூர்ணாஹூதி.
மாலை 06:45 மணி - யாத்ராதானம், கடம் எழுந்தருழுதல்
காலை 07:30 மணிக்கு மேல் 08:30 மணிக்குள் - அருள்மிகு சவுந்தர்ய நாயகி அம்பிகா சமேத கைலாசநாதர் நூதன இராஜகோபுர மஹா கும்பாபிஷேகம்.
காலை 09:00 மணி - அருள்மிகு சவுந்தர்ய நாயகி அம்பிகா சமேத கைலாசநாதருக்கு 1008 கலசாபிஷேகம், தீபாராதனை.
தொடர்புக்கு:
குரு பாலசுப்பிரமணியன், தலைவர் விழா கமிட்டி - 98422 63681
ச. லட்சுமணன் சிவாச்சாரியார் - 9787382258