பதிவு செய்த நாள்
15
ஜூன்
2019
11:06
பழநி: பழநி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் புனித நீராடும் சண்முகாநதி பலநுாறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது. பாலாறு, பொருந்தல், வறட்டாறு, கண்டாறு, கல்லாறு, முள்ளாறு ஆகிய ஆறு சிறுநதிகள் ஒன்றாக சந்திப்பதால், அது சண்முகா (ஆறு முகங்கள் கொண்டது) நதி என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த சண்முகாநதி தற்போது பராமரிப்பு இன்றி, அமலச்செடிகள் மற்றும் ஆக்கிரமிப்புகளால் பாழாகியுள்ளது. இந்நதியின் பெருமையை உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில், கங்கை நதியில் மேற்கொள்ளப்படும் புனித ஆரத்தி வழிபாடு போல, இங்கும் முதல்முறையாக ஆன்மிக பெரியோர்கள் ஏற்பாட்டில் சிறப்பு வழிபாடு நடந்தது. நதிக்கரையில் சிறப்பு ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு நாளில் சண்முகாநதியில் ஆரத்தி வழிபாடு நடத்த உள்ளனர். இதனால் நதியை சுத்தம் செய்து, துார்வார வேண்டும். பக்தர்கள் நீராட வசதியாக நிரந்தரமாக தண்ணீர் தேக்க வேண்டும். படித்துறை அமைக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தினர். இந்நிகழ்ச்சியில் ரிஷிகஷே் கருடானாந்தனசாமி, பழநி மெய்த்தவ அடிகளார், புலிப்பாணிபாத்திரசாமி, பா.ஜ., மாவட்டச் செயற்குழுஉறுப்பினர்கள் ராஜா, தங்கராஜ் உட்பட பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர்.