தேவகோட்டை: தேவகோட்டையில் பழனியாண்டவருக்கு தட்சிணாமூர்த்தி அலங்காரம் செய்து, வைரவேல் சாற்று பூஜை நேற்று நடந்தது.
குன்றக்குடியில் உள்ள ரத்தினவேல் தைப்பூச விழாவிற்காக பழநிக்கு எடுத்து செல்வர். பின் தேவகோட்டையில் நகரபள்ளிக்கும், தொண்டியார் வீதி தி.ராமசாமி இல்லத்திற்கு எடுத்து செல்வர். அதன்படி கடந்த வெள்ளியன்று தி.ராம.சாமி இல்லத்திற்கு ரத்தினவேல் எடுத்து வந்து, பழநியாண்டவருக்கு சாற்றினர். அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதற்காக 16 மூடை அரிசி சாதத்தில் விருந்து அளித்தனர். தொடர்ந்து தட்சிணாமூர்த்தி அலங்காரம் செய்து, வைரவேல் சாற்றினர். நேற்று நிறைவு நாள் விழாவில் ராஜ அலங்காரத்தில் எழுந்தருளிய பழநியாண்டவருக்கு வைரவேல் சாற்றி வழிபாடு செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பழநியாண்டவரை தரிசனம் செய்தனர்.