மயிலாடுதுறை: சீர்காழி சட்டைநாதர் கோயிலில் தமிழ் மாதபிறப்பையொட்டி சிறப்பு கோபூஜை வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைப்பெற்றது.
சீர்காழியில் தருமபுரம் ஆதினத்திற்கு சொந்தமான சட்டைநாதர்கோயில் உள்ளது. இக்கோயிலில் திருநிலைநாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர்சுவாமி அருள்பாலிக்கிறார். இங்கு ஆனி மாதபிறப்பையொட்டி சிறப்பு கோபூஜை வழிபாடு நடந்தது.முன்னதாக கொடிமரத்து வினாயகர்,நந்திபகவானுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை செய்யப்பட்டது. தொடர்ந்து கோசாலையிலிருந்த வரவழைக்கப்பட்ட பசுமாடு,கன்றுக்கு வஸ்திரம், மாலைகள் அணிவித்து சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் பசு,கன்று ஆகியவற்றின் மீது மஞ்சள்,குங்குமம் வைத்து வலம் வந்து மலர்கள் தூவி வணங்கி வழிப்பட்டனர். இதில் கோபூஜை வழிப்பாட்டு குழு பக்தர்கள் திரளானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
இதேபோல் ஆனி மாதபிறப்பையொட்டி அஸ்திரதேவருக்கு தீர்த்தவாரி வழிபாடு நடந்தது.முன்னதாக மேள,தாளங்கள் முழங்க பிரம்மதீர்த்தகுளத்திற்கு எழுந்தருளிய அஸ்திரதேவருக்கு மஞ்சள்,திரவியபொடி,பால்,தயிர்,சந்தனம் முதலான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் அஸ்திரதேவருக்கு தீர்த்தவாரி கொடுக்கப்பட்டது.இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.