பிரான்மலை அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜூன் 2019 11:06
சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே பிரான்மலையில் அமைந்துள்ள கலியுக மெய் அய்யனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது .
ஜூன் 9ம் தேதி காப்புக்கட்டுதலுடன் விழா தொடங்கியது. இதற்காக மண் குதிரைகள் செய்ய கிராமத்தார்கள் சார்பில் ஜூன் 9ம் தேதி பிடிமண் கொடுக்கப்பட்டது. 2 அரண்மனை புரவிகளும், 2 காளாங்கன்று புரவிகளும், 3 நேர்த்திக்கடன் புரவிகளும் செய்யப்பட்டன. இந்த ஆண்டு புரவி எடுப்பு விழா கடந்த 16 ம் தேதி இரவு 9:00 மணிக்கு ஊர்வலமாக புரவிகள் எடுத்து செல்லப்பட்டு கலியுக மெய் அய்யனாருக்கு சிறப்பு பூஜை நடந்தது. நேற்று மாலை பக்தர்கள் மதுக்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.