பதிவு செய்த நாள்
18
ஜூன்
2019
12:06
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன்கோயில் மற்றும் அதன் உபகோயில்களின் உண்டியலில் 40 நாட்களில் 4 கோடி 10 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் காணிக்கையாக கிடைத்தது.
பழநி முருகன் கோயில் மற்றும் பாலசமுத்திரம் பெருமாள் கோயில், திருஆவினன்குடிகோயில், பெரிய நாயகி அம்மன் கோயில்களின் உண்டியல் எண்ணிக்கை கார்த்திகை மண்டபத்தில் நேற்று நடந்தது.இதில் ஒரு கோடி 26 லட்சத்து 39 ஆயிரத்து 80 ரூபாய், -453 கிராம் தங்கம், 3,240 கிராம் வெள்ளி-, 184 வெளிநாட்டு பணம் கிடைத்துள்ளது. இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார், மதுரை மண்டல இணை ஆணையர் பச்சையப்பன் மற்றும் அலுவலர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். ஏற்கனவே கடந்த ஜூன் 10, 11ல் உண்டியல் எண்ணிக்கையில் 2 கோடி 84 லட்சத்து 56 ஆயிரம், நேற்று 1 கோடி 26 லட்சத்து 39 ஆயிரம் என 4 கோடி 10 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் 40 நாட்களில் கிடைத்துள்ளது.