உடுமலை: குறிஞ்சேரி தலகொண்டம்மன் கோவில், மண்டலாபிஷேக சிறப்பு பூஜை நேற்றுடன் நிறைவடைந்தது. உடுமலை அருகே குறிஞ்சேரியில், தலகொண்டம்மன் கோவில் புதுப்பிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மண்டலாபி ஷேக சிறப்பு பூஜைகள் துவங்கியது.நாள்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில், சிறப்பு பூஜைகள் நடந்தது. மண்டலாபிஷேக நிறைவு விழாவையொட்டி, அம்மனுக்கு நேற்று திருக்கல்யாண உற்சவம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில், அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.