பழநி : பழநி முருகன் கோயிலுக்கு கேரள பக்தர்கள் 16 அடி உயரமுள்ள கோபுரக்காவடி மற்றும் மலர்க்காவடி, அலகு குத்தி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பழநி முருகன் கோயிலுக்கு நேற்று கேரள மாநிலம் திருச்சூர் அரிம்பூரைச் சேர்ந்த விநாயகர் காவடி சங்கத்தினர் ஒரு குழுவாக பழநிக்கு வந்தனர்.அவர்கள் 16 அடி உயரமுள்ள கோபுரக் காவடி மற்றும் வண்ணகாகித மலர்களால் ஆன அலங்காரக் காவடி, உடலில் அலகு குத்தி ஆட்ட பாட்டத்துடன் திருஆவினன்குடி கோயிலில் வழிபட்டனர். பின்னர் யானைப்பாதை வழியாக மலைக்கோயிலுக்கு சென்றனர். பின், வெளிப்பிரகாரத்தை காவடிகளுடன் வலம் வந்து முருகரை தரிசனம் செய்தனர். கடந்த 4 ஆண்டுகளாக காவடி, அலகு குத்தி பழநிக்கு வருவதாக குருசாமி கலாத்திரன் கூறினார்.