பதிவு செய்த நாள்
23
ஜூன்
2019
10:06
புதுச்சேரி:இரும்பை நுாதன பாலா திரிபுரசுந்தரி கோவிலில் பள்ளி அறை உற்சவ மூர்த்தி பிரதிஷ்டை நிகழ்ச்சி இன்று நடக்கிறது.
புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான இரும்பை குபேரன் நகரில் அமைந்துள்ள பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில், நுாதன பாலா திரிபுரசுந்தரி பள்ளி அறை உற்சவ மூர்த்தி பிரதிஷ்டை நிகழ்ச்சி இன்று நடக்கிறது.இதனையொட்டி, நேற்று மாலை 5:00 மணிக்கு அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, முதல் காலயாக பூஜை நடந்தது. தொடர்ந்து, நுாதன பள்ளி அறை அம்பாளுக்கு அஷ்டாதசகிரியை பூர்ணாஹீதி தீபாராதனை நடந்தது.முக்கிய நிகழ்வாக, இன்று(23ம் தேதி) காலை 6:00 மணிக்கு இரண்டாம் காலயாக பூஜை, மகா பூர்ணாஹீதி தீபாராதனை, யாத்ராதானம், கடம் புறப்பாடு, பள்ளி அறை அம்பாளுக்கு மகா கும்பாபிேஷகம் நடக்கிறது.இரவு 7:00 மணிக்கு மூலவர் அம்பாளுக்கு விேஷச பூஜை, மகா தீபாராதனையும், இரவு 8:00 மணிக்கு விேஷச அர்தஜாம பூஜை, கண்ணாடி பல்லக்கில் அம்பாள் புறப்பாடாகி பள்ளி அறை எழுந்தருள், கண்ணாடி தொட்டில் சேவை, தீபாராதனை நடக்கிறது.