காஞ்சிபுரம்: அய்யங்கார்குளம் தர்மசாஸ்தா அய்யப்பன் கோவிலில், முதலாம் ஆண்டு, ஏகதின லட்சார்ச்சனை நடைபெறுகிறது.காஞ்சிபுரம் அடுத்த, அய்யங்கார்குளம் கிராமத்தில், பூர்ணா புஷ்கலா நாயகன் தர்மசாஸ்தா அய்யப்பன் கோவில் கும்பாபிஷேகம், கடந்த ஆண்டு, ஜூன் 23ல் நடந்தது.கும்பாபிஷேகம் முடிந்து, ஒரு ஆண்டு நிறைவு பெறுவதையொட்டி, இன்று, காலை, 9:00 முதல், மாலை, 6:00 மணி வரை, ஏகதின லட்சார்ச்சனை நடைபெறுகிறது.