மதுரை : மதுரையில் சித்தர்கள் ஞானபீடம் சார்பில் உலக சித்தர்கள் மாநாடு தமுகத்தில் நேற்று துவங்கியது. இதையொட்டி சித்தர்கள் முறைப்படி கணபதி ேஹாமம் மற்றும் யாகங்கள் நடந்தன.கோவை சிவலிங்கேஸ்வரர் சுவாமிகள் துவக்கி வைத்து ஆசியுரை வழங்கினார். இசையமைப்பாளர் கங்கை அமரன் மாநாடு கொடியை ஏற்றினார். ஓய்வு ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜேந்திரன் உள்ளிட்டோர் மாநாட்டின் நோக்கம் குறித்து பேசினர். ஏழை ஜோடி மணமக்களுக்கு திருமண உதவி தொகை வழங்கப்பட்டன.
தலைமை ஒருங்கிணைப்பாளர் ரத்தனமாணிக்கம், இணை ஒருங்கிணைப்பாளர் செல்வகேசவன், ஆன்மிக ஒருங்கிணைப்பாளர் சிவ ஓம் சூர்யா சாமி, செயல் தலைவர் ராஜசேகர் சுவாமிகள், இளைஞரணி அமைப்பாளர் நீலம்மதுமயன் ஆகியோர் ஏற்பாடு செய்தனர். சித்தர்கள் பாடல்கள் பெரிதும் வலியுறுத்துவது வாழ்வியல் தத்துவமா அல்லது ஆன்மிக தத்துவமா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. இன்றும் மாநாடு நடக்கிறது.