பதிவு செய்த நாள்
24
ஜூன்
2019
12:06
குளித்தலை: குளித்தலை அடுத்த, தெற்குப்பட்டியில் உள்ள மேட்டு மாரியம்மன், கன்னிமார் அம்மன், பிடாரி அம்மன், அழவாயி அம்மன் சுவாமிகளுக்கு, சுற்றுவட்டாரத்தை சேர்ந்த, எட்டு கிராம பொதுமக்கள், மழை வேண்டி, பால்குடம் எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.
குளித்தலை காவிரி ஆற்றிலிருந்து, சங்காயிபட்டி, பேரூர், ராக்கம்பட்டி, செம்பாறைப்பட்டி உட்பட, கூடலூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட, எட்டு கிராம மக்கள், தீர்த்தம் எடுத்து வந்து, ஊருக்கு வடபுறம் உள்ள எல்லையம்மன் கோவிலுக்கு கொண்டு வந்தனர். அதை கொண்டு சுவாமிக்கு அபிஷேகம் ஆராதனை நடந்தது. தொடர்ந்து, பால்குடம், தீர்த்தக்குடம், கரகம் எடுத்து, வாண வேடிக்கை, மேளதாளத்துடன் மேட்டு மாரியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். பால் மற்றும் தீர்த்த அபிஷேகம் செய்து, மழை பெய்ய வேண்டி அம்மனை வழிபட்டனர்.