நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் திரவுபதி அம்மன் கோவிலில் தர்மர் பட்டாபிஷேகம் நடந்தது. நெல்லிக்குப்பம் கடைவீதியில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் தீ மிதி திருவிழாவை முன்னிட்டு கடந்த 7ம் தேதி கொடியேற்றப்பட்டது. தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து அருள்பாலித்தார். கடந்த 21ம் தேதி தீமிதி திருவிழா நடந்தது. நேற்று முன்தினம் தர்மர் பட்டாபிஷேக விழா நடந்தது. விநாயகர்,பெருமாள் அர்ஜூனன் சமேதராய் திரவுபதி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். தர்மருக்கு பட்டாபிஷேகம் செய்து பூஜைகளை ரமேஷ் பட்டாச்சாரியார் செய்தார்.