புதுச்சேரி: பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில் மண்டல அபிஷேகம் நேற்று துவங்கியது. பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நேற்றுமுன்தினம் கோலாகலமாக நடந்தது. புதுச்சேரி அருகே உள்ள பஞ்சவடீயில், 36 அடி உயர ஜெமங்கள பஞ்சமுக ஆஞ்ஜநேய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு ஏற்கனவே உள்ள வலம்புரி மகா கணபதி, ஜெயமங்கள பட்டாபிஷேக ராமச்சந்திர மூர்த்தி சன்னதிகளுடன், ஸ்ரீவாரி வேங்கடாசலபதிக்கு புதிதாக சன்னதி அமைக்கப்பட்டு நேற்றுமுன்தினம் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
நேற்று 24 ம் தேதி முதல் மண்டலாபிஷேக பூஜை துவங்கியது. இதையொட்டி நேற்று காலை நான்கு சன்னதிகளிலும் அபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமி அலங்கரிக்கப்பட்டு மண்டல அபிஷேக பூஜைகள் நடந்தது. மண்டலாபிஷேகம் வரும் ஆகஸ்ட் 11 ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. கும்பாபிேஷக விழாவில் கலந்து கொள்ள முடியாதவர்கள், மண்டலாபிேஷக பூஜையில் பங்கேற்று ஆஞ்ஜநேயரின் அருளை பெறலாம். 48 நாட்கள் நடைபெறும் இந்த மண்டல அபிஷேக பூஜையில் கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள் பஞ்சமுக ஸ்ரீஜெயமாருதி சேவா டிரஸ்டை அணுகும்படி கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.