ஊத்துக்கோட்டை : எல்லாபுரம் ஒன்றியம், தொம்பரம்பேடு கிராமத்தில் உள்ளது மகா கால பைரவர் கோவில். பழமை வாய்ந்த இக்கோவிலில், ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி விழா கொண்டாடுவது வழக்கம்.இன்று, செவ்வாய்க்கிழமை தேய்பிறை அஷ்டமி விழா நடைபெற உள்ளது. இதையொட்டி, காலை, 10:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் மகா தீபாராதனை காட்டப்படும்.இதேபோல், மற்ற கோவில்களில் உள்ள பைரவர் சன்னதிகளில் தேய்பிறை அஷ்டமி விழா நடைபெறும்.