ஆற்காட்டில் பாலாற்றின் இரு கரையோரங்களிலும் அகத்தீஸ்வரர் (வன்னிவேடு), அத்தீஸ்வரர் (குடிமல்லூர்), கவுதமேஸ்வரர்(காரை), வசிஷ்டேஸ்வரர் (வேப்பூர்), வால்மீகீஸ்வரர் (மேல்விஷாரம்), பரத்வாஜேஸ்வரர் (புதுப்பாடி) என 6 சிவன் கோயில்கள் உள்ளன. சிவ-பார்வதி திருமணத்தை தரிசிக்க வந்த முனிவர்கள் தத்தம் பெயர்களில் ஈசனை பிரதிஷ்டை செய்த இத்தலங்களை ஒரே நாளில் சென்று தரிசித்து வருவது காசிக்குச் சென்று விஸ்வநாதரை தரிசித்த பலனைத் தரும் என்பது நம்பிக்கை!