திருமலை வேங்கடவன் கோயிலில் ராமானுஜர் சன்னதியின் மேற்குப் பகுதியில் சங்கீர்த்தன பண்டார என்னும் சிறிய அறை உள்ளது. தலப்பாக கவிஞர்கள் எனப்படும் அன்னமாச்சாரியார், அவரது மகன் பெத்த திருமலாச்சாரியார், பேரன் சின்ன திருமலாச்சாரியார் ஆகியோர் ஏழுமலையானைப் பற்றி பாடிய பாடல் தொகுப்புகள் (சங்கீர்த்தனம்) இங்கு வைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன.