ஒரு விவசாயி வனத்தில் மாட்டுக்குப் புல் அறுக்கச் சென்றபோது துளசிச்செடிகளைக் கண்டான். அதன் வாசனையில் மயங்கி, சில செடிகளை அப்புல்லோடு சேர்த்துக் கட்டி தலையில் தூக்கி வைத்துக் கொண்டு வீட்டுக்குத் திரும்பியபோது அவன் ஆயுள் முடியும் நேரம் நெருங்கி வந்தது. ஒரு குட்டி சர்ப்பம் அவன் தலையில் இருந்து புற்கட்டில் ஒளிந்திருந்தது அவனுக்குத் தெரியவில்லை. அவன் தலையில் துளிசிச்செடி இருந்ததால் அந்தப் பாம்புக்கு அவனைத் தீண்ட சக்தி இல்லாமல் போயிருந்தது. அந்த வனத்தில் ஞானி ஒருவர் தினமும் மகாவிஷ்ணுவை துளசி இலையால் பூஜித்து வந்தார். புல்லுக்கட்டைச் சுமந்து செல்லும் விவசாயின் பின்னால் யமதூதர்கள் செல்வதை ஞான திருஷ்டியால் அறிந்து, அவர்களிடம் காரணம் கேட்டார். ""முனிவரே... விவசாயியின் ஆயுட்காலம் முடிந்து விட்டதால், சாபத்தை விட்டு உயிரைப் பிடிக்க வந்திருக்கிறோம். ஆனால் விவசாயியோ துளசியைத் தலையில் வைத்து இருக்கிறான். அதைக் கீழே வைத்ததும் அவன் உயிரைக் கவர்வோம் என்றனர்.
விவசாயியைக் காப்பாற்ற என்ன செய்வ தென்று துறவி யோசித்தார். யம தூதர்களிடமே, ""எப்படி அவனைக் காப்பாற்றலாம்? என்று கேட்டார். அவர்கள், ""முனிவரே! நீங்கள் இதுவரைக்கும் துளசி தளங்களால் மகாவிஷ்ணுவை அர்ச்சித்து பூஜை செய்து பெற்ற புண்ணிய பலன்களை விவசாயிக்குக் கொடுத்தால் அவன் உயிரை எடுத்துச் செல்ல மாட்டோம் என உறுதியளித்தனர். முனிவர் மகிழ்வுடன் தான் பெற்ற புண்ணியங்கள் அனைத்தையும் அவனுக்குத் தாரை வளர்த்துக் கொடுத்தார். விவசாயியும் பிழைத்தான். இந்தக் கதை துளசி புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.