பதிவு செய்த நாள்
26
ஜூன்
2019
12:06
திண்டுக்கல் : தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை யொட்டி சொர்ண ஆகர்ஷன பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. தேய்பிறை அஷ்டமியை யொட்டி நேற்று சொர்ண ஆகர்ஷன பைரவருக்கு 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை மற்றும் ஆறு கால பூஜைகள் நடந்தது. சவுந்திரராஜ பெருமாள், அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.இதையொட்டி திண்டுக்கல், தேனி மட்டுமின்றி மதுரை, திருச்சி, சேலத்தில் இருந்து வந்திருந்த பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பெரியகுளம் ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய தாஸின் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது.
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கன்னிவாடி:: கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில், தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக, பால், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 30 வகை அபிஷேகம் நடந்தது. மூலவர், உற்சவர், நந்திக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தேவார, திருவாசக பாராயணத்துடன் விசஷே பூஜைகள் நடந்தது. விழாவில் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது.
கன்னிவாடி: சோமலிங்கசுவாமி கோயில், ஆலத்துாரான்பட்டி பார்வதி சமேத பரமேஸ்வரன் கோயில், காரமடை ராமலிங்கசுவாமிகள் மடத்தில், தேய்பிறை அஷ்டமி சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.