திருமலைக்கோயிலில் 9ம் தேதி சண்முகருக்கு சிறப்பு அர்ச்சனை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21மார் 2012 12:03
தென்காசி:பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயிலில் வரும் ஏப்.9ம் தேதி சண்முகருக்கு சிறப்பு அர்ச்சனை நடக்கிறது.பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் சண்முகருக்கு சிறப்பு அர்ச்சனை நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு வரும் ஏப்.9ம் தேதி சண்முகருக்கு சிறப்பு அர்ச்சனை நடக்கிறது. அன்று விநாயகர் மற்றும் திருமலைக்குமாரசுவாமிக்கு சிறப்பு பாலாபிஷேகம், புஷ்பாஞ்சலி, அலங்கார தீபாராதனை நடக்கிறது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.ஏப்.10ம் தேதி காலையில் அச்சன்கோவிலில் அபிஷேகம், அன்னதானம், மதியம் உச்சிக்கால சிறப்பு பூஜை, அன்னதானம் நடக்கிறது. மேலும் புஷ்பாஞ்சலி, மாலையில் திருவிளக்கு பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை திருமலைக்குமாரசுவாமி சண்முகர் அர்ச்சனை வழிபாட்டு அடியார்கள் சங்கத்தினர் செய்து வருகின்றனர்.