வெள்ளிக்கிழமை என்ன செய்ய வேண்டும் எனச் சொல்கிறார் நபிகள் நாயகம் “வெள்ளிக்கிழமையன்று பள்ளிவாசலுக்கு தொழுகை செய்ய வந்தால், குளித்து விட்டு வரட்டும். வாரத்தில் ஒரு முறையாவது தலையையும், உடலையும் கழுவி குளிப்பது இறைவனுக்கு செய்ய வேண்டிய கடமை. பருவமடைந்த ஒவ்வொருவரும் வெள்ளிக்கிழமை கட்டாயம் குளிக்க வேண்டும். முடிந்தால் நறுமணம் பூசவும் வேண்டும்” என்கிறார்.