சிங்கம்புணரி:முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயில் ஆனித்திருவிழா ஜூலை 6ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
5ம் திருவிழா அன்று பூப்பல்லக்கு உற்ஸவம் நடைபெற்றது. மல்லிகை பூக்களாலும், மின் விளக்காலும் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் மீனாட்சி அருள்பாலித்தார். முறையூர் கிராம த்தார்களால் மாடுகள் பூட்டிய சப்பரத்தில் பல்லக்கு ஏற்றப்பட்டு சுவாமி உலா வந்தார்.ஜூலை 13ம் தேதி மீனாட்சி சொக்கநாதருக்கு திருக்கல்யாணம் நடைபெறும். அன்றைய தினம் பூப்பல்லக்கு உற்ஸவமும் நடைபெறும்.
ஜூலை 14 ம் தேதி தேரோட்டம் நடைபெறும்.விழாவையொட்டி வர்த்தக சங்க பவள விழா சிறப்பு மலர் வெளியீட்டு விழா நடந்தது. வர்த்தக சங்க தலைவர் ஜெயபிரகாஷ் தலைமை வகித்தார். செயலாளர் அண்ணாமலை முன்னிலை வகித்தார். முன்னாள் வர்த்தக சங்க செய லாளர் அழகப்பன் மலர் அறிமுகம் செய்தார். முன்னாள் ஊராட்சி தலைவர் சத்தியமூர்த்தி புத்தகத்தை வெளியிட்டார். அழகு புத்தகத்தை பெற்றுக் கொண்டார். விஸ்வநாதன், தர்ம லிங்கம், கோபால். உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை முறையூர் கிராமத்தார்கள் செய்து வருகின்றனர்.