பதிவு செய்த நாள்
12
ஜூலை
2019
12:07
திருவள்ளூர்:பத்மாவதி தாயார் சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் கும்பாபிஷே கம், நேற்று (ஜூலை., 11ல்), காலை, சிறப்பாக நடைபெற்றது.
திருவள்ளூர், சத்திய மூர்த்தி தெருவில், பத்மாவதி தாயார் சமேத பிரசன்ன வெங்கடேச பெரு மாள் கோவில் உள்ளது. பழமையான கோவில் சீரமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா, நிகழ்ச் சிகள், 9ம் தேதி துவங்கின. மறுநாள், 10ம் தேதி காலை, அஷ்டபந்தனம் சாத்துதல் நடைபெற்றது. நேற்று (ஜூலை., 11ல்), காலை, 9:45 மணிக்கு பிரசன்ன வெங்கடேச பெருமாள் சர்வ விமான கோபுர மஹா கும்பாபிஷேகம், வேத திவ்ய பிரபந்த சாற்று முறையுடன் நடைபெற்றது. இரவு சேஷ வாகனத்தில், பெருமாள் வீதியுலா வந்தார்.